Club Events
21-Aug-2025
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடந்திய இலக்கியப் பெருவிழா 21.08.2025 அன்று நடைபெற்றது. பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் க. முருகேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு "அகலாது அணுகாது தீக்காய்வார்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் விடுதலைப் போராட்டத் தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், வ.உ.சி., ராணி இலட்சுமிபாய், சரோஜினி நாயுடு முதலியவர்கள் குறித்தும், சுதந்திரம் எனது பிறப்புரிமை, படித்ததில் பிடித்தது, அறிவோம் ஒரு செய்தி என்னும் தலைப்பில் பேராசிரியர்கள் மற்றம் மாணவர்கள் உரை நிகழ்த்தினார்கள். கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கச் செயலாளர் கணேசன் ஐயா அவர்கள் முன்னின்று இவ்விழாவைச் சிறப்பாக நடத்தினார். இந்நிகழ்வில் அனைத்துத்துறை மாணவர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College